• Fri. Apr 26th, 2024

சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!..

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறும்.

சென்னையில் உள்ள வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 பகுதிகளில் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *