• Sat. Apr 20th, 2024

வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயிற்சி :அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

Byஜெ.துரை

Mar 13, 2023

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் வாக்கத்தான் நடைப்பயிற்சி சிறப்பாக நடை பெற்றது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இந்த விழிப்புணர்வு நடை பயிற்ச்சியை இந்திய கதிரியக்க கழகத்தின் சென்னை மண்டல தலைவர் மரு. அபுபக்கர் சுலைமான் பொதுச் செயலாளர் மரு.அஷ்ரப் அஹமத் ஆகியோர்கள் இணைந்து நடத்தினர்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவர்கள் மற்றும் பொது மக்களை ஊக்கப்படுத்தி கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .பின்பு அவரும் அவர்களுடன் சேர்ந்து நடை பயிற்சியை மேற்கொண்டார். இந்த நடை பயிற்ச்சியின் போது கதிரியக்க கழகத்தின் பிரிவான ரக்க்ஷா என்ற அமைப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பெண் குழந்தைகளின் நலம் பேணுதல் தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் கையில் ஏந்தி கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டனர்.இதில் மருத்துவ மாணவர்கள், மூத்த கதிரியக்க மருத்துவர்கள் சுமார் 250 க்கும் மேற் பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *