தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிவதால் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 21 ஆம் தேதி வரை விஐபி தரிசனத்தை ரத்து செய்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதீ கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இதனால் இலவச தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.