




விசிக தலைவர் திருமாவளவன் திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திடீரென வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து வரும் விசிக, சமீப காலமாக திமுக அரசின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறது. ஏற்கனவே முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசிகவில் ஒரு தரப்பினரும் ஆதவ் கருத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி திருமா நடவடிக்கை எடுத்தார். இருந்தாலும் அவ்வப்போது அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு விசிகவிரிடையே தொடர்ந்து வருகிறது.
இநத நிலையில், விசிக தலைவர் திருமாளவன் திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், அரசியலில் முரண் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. சில கட்சிகளைப் போல் நாம் பேரம் பேசி கூட்டணி வைக்கவில்லை, நாம் திமுகவை மட்டுமே நம்பியும் இல்லை” “இது சத்திரம் இல்லை என காட்டமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற தமிழ்ச்சங்க விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு செல்லும் முன் தனது சமூக வளைதளத்தில் தொண்டரிகளிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “குடியிரிமை திருத்த சட்டம் எவ்வளவு கடுமையானதோ, அதைவிட வக்ஃபு சட்டத் திருத்தம் மிகவும் கடுமையானது. பாஜக அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துபோக செய்யும் சட்டங்களை கொண்டு வருகிறது. இதைப் பார்த்து கொண்டிருக்க முடியாது. வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக உள்பட 72 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளோம். வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டும். மே மாத இறுதியில் வட இந்தியா திரும்பி பார்க்கும் வகையில் பேரணி நடத்த வேண்டும்.
சென்னையில், ஏப்ரல் 22ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். இதில், காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிற்பகலில் மேலிட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் என நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து விடக்கூடாது என கருதுகிறோம். ஆனால், இந்தியா முழுவதும் அதன் ஆக்டோபஸ் கால்கள் பரந்து விரிந்துள்ளன. அனைத்தையும் எப்படியோ சுற்றி வளைத்து அவர்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் செயல்படுகிறோம். ஆனால், ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
தேர்தல் அரசியலில் தனிச்சியாக முடிவு எடுக்க முடியாது. இது ஒன்றும் கம்ப சத்திரம் இல்லை, அதுபோல் அனைத்து கதவுகளை திறந்து போட்டுவிட்டு, யார் அதிகம் பேரத்திற்கு வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து கொள்ளவது போல் நம்மால் நடந்து கொள்ள முடியாது. அவ்வாறு நடந்து கொள்வது பெரிய ராஜதந்திரம் இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலை பொருட்படுத்தவும் விரும்பவில்லை.
எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்வதற்கு தனி துணிச்சல் வேண்டும். இதேல்லாம் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அவதுறு பரப்புவார்கள். ஒரு கட்சியின் முன்னணி தலைவர்கள் கட்சியின் கருத்தை அறிந்து பதிலளிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் கட்சி பேரில் தங்களது கருத்தை முன் வைக்க நினைப்பதை தவிர்க்க வேண்டும். கூட்டணி தொடர்பான விவாதங்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் தீவிரமடையும்.
திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதரவாளர்களிடம் எடக்கு மடக்காக பேசி, வார்தைகளை வாங்கி அதை திமுகவிற்கு எதிராக திருப்பி, தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அரசியலில் முரண் என்பது வேறு, கூட்டணி யுக்தி என்பது வேறு. இதில் விசிக தெளிவாக உள்ளது,”

இவ்வாறு பேசியுள்ளார்.

