.காங்கிரஸ் திமுக இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார். வேட்பாளர் விஜய் வசந்த். அங்க பெண்கள் கூட்டத்தில்,தாயின் அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த விஜய் வசந்த் வாஞ்சையுடன் அந்த சிறு குழந்தையை கைகளில் தூக்கி குழந்தையின் பெயர் கேட்டார். குழந்தைக்கு விளையாட்டு காட்டியது. அங்கு கூடியிருந்த அனைவரையையும் ஈர்த்தது. இந்த பிரச்சாரத்தின் போது கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.