

’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த படைப்பு வீரன்
வீரனூர் என்ற கிராமத்தில் வசிக்கும் குமரனை (ஹிப்ஹாப் ஆதி) சிறுவயதில் மின்னல் ஒன்று தாக்கி விடுகிறது. இதன் காரணமாக அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுவதால், அவரது அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விடுகிறார். மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அவரால் அடுத்தவரது மூளையை கட்டுப்படுத்த முடியும், கைகளிலிருந்து மின்னல் சக்தியை வெளிப்படுத்த முடியும். அவர் வளர்ந்ததும் அவரது சொந்த ஊருக்கு வரப்போகும் மிகப்பெரிய ஒரு ஆபத்து குறித்து அடிக்கடி அவருக்கு கனவுகள் வருகின்றன. இதனால் வீரனூருக்கு கிளம்பி வருகிறார் குமரன். ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தக் கூடிய லேசர் பவர் டெக்னாலஜி என்ற திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியும் (வினய்) அவரது தம்பியும் அந்த ஊர் மக்களை ஏமாற்றி அங்கு செயல்படுத்த முயற்சிக்கின்றனர். ஊரில் இருக்கும் எல்லை தெய்வமான வீரன் கோயிலை இடித்தால் மட்டுமே அந்த திட்டத்தை தொடர முடியும் என்கிற நிலை. வில்லன்களின் திட்டத்தை அறிந்துகொள்ளும் ஆதி தனது சக்திகளின் மூலம், வீரனாக உருவெடுக்கிறார். அவரால் வில்லன்களின் சதியை முறியடிக்க முடிந்ததா என்பதே ‘வீரன்’ படத்தின் கதை.தமிழில் சூப்பர்ஹீரோ படங்கள் மிகவும் குறைவு.
மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படமும் பெரியளவில் பேசப்படவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
மலையாளத்தில் பேசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான ’மின்னல் முரளி’ படமும் இதே கிராமத்து சூப்பர்ஹீரோ கதைக்களம்தான். ஆனால் அப்படத்தில் இருந்த சூப்பர்ஹீரோ பின்னணிக்கான நியாயமும், அதற்கான மேக்கிங்கும் ‘வீரன்’ படத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு சாதாரண மனிதன், அவனுக்கு திடீரென கிடைக்கும் சக்திகள், அவனுக்கு நிகரான அல்லது அவனை விட பலமான வில்லன். இவை மூன்றும்தான் அடிப்படை. இப்படத்தில் முதல் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஹீரோவுக்கு சமமான வில்லன் இதில் இல்லை. மெயின் வில்லனாக வரும் வினய்க்கு படம் முழுக்க ஓவர் பில்டப் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இறுதியில் காமெடி பீஸ் போல அவரது கதாபாத்திம் பப்படமாகிவிடுகிறது.
திரைக்கதை போரடிக்கவில்லை. படம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இப்படத்தின் பிரச்சினையே ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கான ஏற்ற இறக்கங்கள் எதுவும் இல்லாத மட்டையான கதை சொல்லல்தான். ஹிப்ஹாப் ஆதி தனக்கு எதுவருமோ அதை உணர்ந்து செய்திருக்கிறார்.
நாயகியாக வரும் ஆதிரா ராஜுக்கு படத்தில் வேலையே இல்லை. ஆதியின் நண்பராக வரும் சசி செல்வராஜ், பார்வை குறைபாடு கொண்ட தோட்டக்காரராக வரும் ஜென்சன், பிரசன்னா பாலச்சந்திரன், சாவித்ரி உள்ளிட்ட ‘நக்கலைட்ஸ்’ குழுவினர் அனைவரது நடிப்பும் வெகு இயல்பு. காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காமெடி ஓரிரு இடங்களில் சிரிப்பு மூட்டினாலும், பல இடங்களில் எடுபடவில்லை.ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம், எழில் கொஞ்சும் மலை கிராமத்தின் அழகை தீபக் மேனனின் கேமரா கண்களுக்கு விருந்தாக்குகிறது. படத்தின் விசுவல் எஃபெக்ஸில் பெரிதாக மெனக்கெடல் இல்லை என்றாலும், படத்திலும் அதற்கான தேவை இல்லாததால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை.
படத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான சின்னி ஜெயந்த் ஹீரோ ஹிப்ஹாப் ஆதியால் கட்டுப்படுத்தப்பட்டு மாறி மாறி பேசும் காட்சி, முதல் இரண்டு தடவை சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் அதற்காக அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பது எடுபடவில்லை. வில்லனின் தம்பி பத்ரி சாமியாடும் காட்சியிலும் இதேதான் நடந்துள்ளது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சி பெரிதாக எடுபடவில்லை. ஹீரோவுக்கு மின்னல் சக்தி கிடைப்பதற்கு பின்புலமாக எந்தக் காரணமும் படத்தில் சொல்லப்படவில்லை, சரி சூப்பர்ஹீரோ படங்களில் இது போன்ற லாஜிக்குகள் பார்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி காட்சிப்படுத்தியிருக்க வேண்டாமா? சிலந்தி கடித்து ஸ்பைடர்மேன் ஆவதையும், வானத்தில் இருந்து வந்த ஏலியன் சூப்பர்மேன் ஆவதையும் பார்வையாளர்கள் நம்பியது அதற்கான நம்பகத்தன்மை அப்படங்களில் இருந்ததால்தான்.
மண்சார்ந்த சூப்பர்ஹீரோ என்ற கதைக்களம் சிறப்பானதுதான் என்றாலும், ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கான காட்சியமைப்பும், சுவாரஸ்யமான மேக்கிங்கும் இல்லாததால் சுமாரான ஹீரோவாகவே நின்று விடுகிறான் இந்த ‘வீரன்’.
- முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்…குமரிக்கு கிடைத்த பெருமை மிகுந்த பாராட்டு:முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர். தமிழ் நாட்டில் … Read more
- டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு … Read more
- சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி … Read more
- லைகா புரொடக்ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது…திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் … Read more
- தூய்மை பணியில், கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படை..,கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியான கோவளம் ஊராட்சி பகுதியில் கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை … Read more
- சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா..!சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் … Read more
- “ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்..!சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! … Read more
- காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்…மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. … Read more
- மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை.., போலீசார் விசாரணை…மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மேலவாசல் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 37) … Read more
- விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்…சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம … Read more
- மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெங்கடேசன் எம். எல். ஏ பங்கேற்பு..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் … Read more
- கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். … Read more
- பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட … Read more
- துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் … Read more
- அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி … Read more
