

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்
இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்
இருந்தபோதிலும் காமடிக்காக என்பதை காட்டிலும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் யோகிபாபுவின் கதாபாத்திரத்தை மாரிசெல்வராஜ் வடிவமைத்திருப்பார். மேற்கு மாவட்ட அரசியல் பற்றி போகும்மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட போது தமிழ் சினிமா அதிர்ந்து போனது என்று தான் கூற வேண்டும். காமடி நடிகராக மட்டுமே தமிழக மக்களின் தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் வடிவேலு திரைப்படங்களில் பேசிய வாழ்வியல் வசனங்கள் வந்துவிடும். அப்படிப்பட்ட காமெடி அமுதசுரபி கலைஞன் வடிவேல் அரசியல் படத்திலா என்கிற ஆச்சர்யத்திற்கு மாமன்னன் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் இயக்குனர் மாரிசெல்வராஜ் வடிவேல் தோற்றம் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தார். படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் என்றாலும் கதையின் நாயகனாக வடிவேல் இருப்பார் என்பதை அவரது தோற்றம் வெளிப்படுத்தியது. அத்துடன் படத்தில் அவர் பாடிய பாடல் இன்றைக்கு அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது.வடிவேல் காமெடி நடிகர் மட்டும் இல்லை பன்முக கலைஞன் என்பதை மாமன்னன் படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பதை படத்திற்கான விளம்பர புகைப்படங்கள் உணர்த்துகிறது அதனை நேற்றையதினம் சென்னையில் நடைபெற்ற மாமன்னன் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியது உணர்த்தியது
தேவர் மகன் படத்துக்குப் பிறகு எனக்கு அமைந்த முக்கியமான படம் இது” என ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் வடிவேலு பேசினார்
“நான் எங்கும் செல்லவில்லை. எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோனில் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு கேப்-பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ்களால் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளை நான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எல்லோரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் கதை. அருமையான கதையை உதயநிதி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன். நான் பாடவில்லை, அவர் தான் என்னை பாட வைத்துள்ளார்.
மறைந்த என் தாயை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம். படம் வெற்றி பெறும். ‘தேவர் மகன்’ படத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய படம் இது. அரசியல் படம் இது. புதுமையான படம் இது. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் எனக்கு இதில் அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்ல முடியாது. இவ்வளவு நாள் கதாநாயகனாகநடித்தார். தற்போது அரசியலில் ஹீரோவாகப் போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்” என்றார்.
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
- தமிழகத்தில் முதன் முறையாக சினிமா ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேர்வதற்கான ஒர் அறிய வாய்ப்பு..!நன்கு ஸ்டண்ட் பயிற்சி கலை தெரிந்த வெளி நபர்களுக்கு தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை … Read more
- படித்ததில் பிடித்ததுதத்துவங்கள் 1. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும். 2. முதலில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 … Read more
- குறள் 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும் விடாமல் வரும் வறுமை … Read more
- அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட … Read more
- சர் சார்லசு குன் காவோ நினைவு தினம் இன்று (செப்டம்பர் 23, 2018)…சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao) நவம்பர் 4, 1933ல் சீனாவின் … Read more