மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வாவிகரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாலகுருநாதன்,
ஸ்ரீ அங்காளஈஸ்வரி, ஸ்ரீநொண்டிகருப்பசாமி, திருக்கோவில், இரண்டாம் ஆண்டு கேளரி எடுப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து, கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, வண்டிக்கார வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.