விபத்துக்களை தடுக்க உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் விபத்துக்களை தடுக்க ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் வாய்ந்த ரோலர் கிராஷ் பேரிங் எனப்படும் தடுப்பு வளையங்களை சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மலைப்பாதைகளில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி விபத்துக்களை குறைக்க தடுப்புகள் அமைக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெப்பக்காடு பகுதியில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி…
மலைமாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்து உள்ள தமிழ் நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் உதகையில் இருந்து மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கல்லட்டி மலைப் பாதையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் விபத்துகளை தடுக்க ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ரோலர் கிராஷ் பேரிங் எனப்படும் தடுப்பு வளையங்களை கல்லட்டி மலைப்பாதையில் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் விபத்துக்குள்ளாவை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்க் கொண்டனர். இதனை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மையப்பகுதிகளாக அமைந்துள்ள தெப்பக்காடு பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நுற்றாண்டை கடந்த பாலம் பழுதடைந்ததால் அதை புதிதாக இடித்து கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதனையும் ஆய்வு மேற்க் கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பருவமழை தூங்குவதற்கு முன் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பாலத்தை கட்டி முடிக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், கடந்த ஆட்சியில் வனப்பகுதியில் அமைந்துள்ள மக்கள் பயன்படுத்தி வந்த சாலைகளை புதுப்பிக்காமலும்,புதிய சாலைகளை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த காலங்களில் போடப்படாத அனைத்து சாலைகளும் முறையாக டெண்டர் விடப்பட்டு, தற்போது இந்த சாலைகள் அனைத்தும் வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் போடப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், நீலகிரி மாவட்ட கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: