• Fri. Apr 19th, 2024

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!

Byகாயத்ரி

Aug 27, 2022

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி நேற்று உச்சநீதிமன்றத்தில் அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் இன்று பதவியேற்று கொள்கிறார். தலைமை நீதிபதிக்கு காலை 10.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சார்பில் அரசு வழக்கறிஞராக செய்யப்பட்டவர். இந்த நிலையில், யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட 2வது நபர் இவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *