• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குந்தா பாலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்

எஸ் ஜாகிர் உசேன்
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மேல்முகம் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த கிருஷ்ணன் பரமன் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் சமயத்தில் இரண்டு சிறுத்தைகள் சாலையில் நின்றவாறு இருந்தது சிறிது நேரத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பிரபு என்பவரின் வளர்ப்பு பூனையை மற்றொரு சிறுத்தை பிடித்து சாலைக்கு இழுத்து வந்தது இரண்டு சிறுத்தைகளும் அருகே இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்