தான் காதலிக்கும் பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த நண்பர் மணிகண்டனை கொலை செய்துள்ளார் உயிர் நண்பன் வீரபத்திரன்.

வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்ற டிரைவரை கல்லூரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மரம் நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடன் பணிபுரிந்த வீரபத்திரன் மற்றும் அவரது நண்பர் முத்து என்பவரை தாம்பரம் துணை ஆணையாளர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் வீரபத்திரன் காதலிக்கும் பெண்ணை மணிகண்டன் காதலிக்குமாறு தொந்தரவு செய்து ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததால் மணிகண்டனை, வீரபத்திரன் தன் நண்பன் முத்து உடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.










