பிரான்ஸ் தலைநகரில் உள்ள ஈபிள் டவரில் விளக்குகளை மின்சாரதட்டுபாடு காரணமாக வழகத்தை விட முன்னதாக அணைக்க முடிவு
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் நாள்தோறும் 20,000 க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் நள்ளிரவு 1மணி வரை ஜொலிக்கும்.ஆனால் உக்ரைன்- ரஷ்ய போர் காரணமாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுர விளக்குகள் வரும் 23ம் தேதி முதல் இரவு 11.45 மணிக்கே அணைக்கப்படும் என நகர் மேயர் கூறியுள்ளார்.