உதகையில் போக்குவரத்து கழக நுகர்வோர் கூட்டம் நடைபெற்றது.
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு நுகர்வோர் கூட்டம் பொதுமேலாளர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொது மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் செயலாளர் பாலகிருஷ்ணன், புளுமவுண்டன் நுகர்வோர் சங்க தலைவர் நாகராஜன், உதகை நுகர்வோர் சங்க நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டு பேசும்போது, பல பேருந்துகள் உடைந்த நிலையில் பழையனவாக உள்ளன மாற்ற வேண்டும். பந்தலூர் கூடலூர் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பந்தலூர் நேரகாப்பாளர் நியமித்து மற்றும் சக்கரம் வழங்க வேண்டும் கூடலூர் பாடந்தொரை மேல்கூடலூர் வரை நகர பேருந்துகள் இயக்க வேண்டும் கோத்தகிரி பேருந்து நிலையம் பேருந்து கால அட்டவணைகள் வைக்க வேண்டும். ஓட்டுநர் நடத்துநர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை கூடுமானவரை தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். வழித்தடங்கள் அறிவிப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளவற்றை சரி செய்ய வேண்டும். குந்தலாடி பொன்னானி வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். உதகை தலைகுந்தா பேருந்து சேரிங்கிராஸ் பேருந்து நிலையம் வழியாகவும் இயக்க வேண்டும். உதகை கைகாட்டி வரை காலை மாலை நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். பேருந்துகள் குப்பைகளை சுத்தப்படுத்தி வெளியே இயக்க வேண்டும். ஜன்னல் கண்ணாடிகள் சரியாக திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதுகுறித்து பதில் அளித்த பொது மேலாளர் நடராஜன் பேசும்போது மக்கள் நலன் கருதி போக்குவரத்து கழக சேவை அடிப்படையில் இயக்க படுகின்றது. ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கு சேவை வழங்க பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனை மக்கள் சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும். சில பேருந்துகள் சொற்ப வருமானத்தில் இயக்கப்படுவதும் இன்னும் இழப்பை அதிகபடுத்துகின்றது. தற்போதைய வருவாயில் 90 சதவீதத்திற்கு மேல் டீசலுக்கு செலவிடப்படுகிறது. தற்போது வருவாய் குறைவான வழித்தடம் மற்றும் நடைகள் குறித்து கணக்கெடுத்து மாற்று முறைகளில் மக்களுக்கு பயன்தரும் வகையில் பேருந்துகள் இயக்க முயற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுகின்றோம். அதன் அடிப்படையில் புதிய வழித்தடங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட உள்ளது அதுபோல் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 முதல் 20 பேருந்துகள் நீலகிரி மாவட்ட பயன்பாட்டிற்கு வாங்க உள்ளோம். வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய பேருந்துகள் வந்துவிடும். பழைய பேருந்துகள் தற்போது பேருந்துகள் பராமரிப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறைகள் இருப்பின் அவற்றை விரைவில் சரி செய்து தரப்படும் என்றார். மக்கள் அரசு பேருந்துகளை அதிகம் பயன்படுத்தும்போது கூடுதல் பேருந்துகள் இயக்க முடியும் என்றார். உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். உதவி மேலாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]