• Fri. Apr 26th, 2024

வார விடுமுறையில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாவாசிகள்!

Byசிபி

Mar 6, 2022

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகன் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் கொடைக்கானலில் காலை முதலே மிதமான வெப்பத்துடன் கூடிய குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த இதமான கால சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *