• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

BySeenu

Jan 20, 2025

கோவையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு முறையாக பணிக்கு வராமல் இருந்த மேலாளர் பணி நீக்கம்…

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள உணவகம் அறைகள் மதுபானக் கூடத்தை ஆய்வு செய்த அவர் அங்கு உள்ள வசதிகளை குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

ஆய்வின் போது மேலாளர் முரளிதரன் முறையாக பணிக்கு வராமல் இருப்பதாகவும், வருவாய் குறைவாக இருப்பதாகவும், தெரிய வந்த நிலையில் அவரை பணியில் இருந்து நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் :-

தமிழ்நாடு ஹோட்டல் எப்படி பராமரிக்கப்படுகிறது ? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், உணவகம், அறைகள் எல்லா முறையாக பராமரிக்கப்படுகிறதா ? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இங்கு வரக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா ? என்பது பற்றி ஆய்வு செய்து இருப்பதாக தெரிவித்தார். ஒரு சில குறைகள் இருப்பதாகவும், அதனை எல்லாம் நிவர்த்தி செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவுட்ஷோர்சிங் முறையில் தேவையான ஆட்களை எடுத்து இருப்பதாகவும், இருப்பவர்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இங்கு வரக் கூடிய வாடிக்கையாளர்களிடம் கனிவான உபசரிப்பு இருக்க வேண்டும், சுவையான உணவுகளை வழங்க வேண்டும் ஹோட்டலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். நிரந்தர பணியாளர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறினார்.