சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் ,அக்17ல் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவுநாள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பு இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைந்த போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் இன்றைய கூட்டத்தில் மோதல் வெடிக்கலாம் என்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.