விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய, அமெரிக்க வானியலாலர் லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள் இன்று (மே 9, 1970).
லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு (Louise Freeland Jenkins) ஜூலை 5, 1888ல் மசாசூசட்டில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். 1911ல் மவுண்டு கோலியோக் கல்லுரியில் பட்டம் பெற்றார். இவர் அதே நிறுவனத்தில் 1917ல் வானியலில் முதுவர் பட்டம் பெற்றார். 1913ல் இருந்து 1915 வரை பிட்சுபர்கில் உள்ள அல்லிகேனி வான்காணகத்தில் பணிபுரிந்தார். பின்னர், இவர் மவுண்டு கோலியோக் கல்லூரியில் 1915 முதல் 1920 வரை பயிற்றுநராக இருந்தார்.


ஜென்கின்சு 1921 ஆம் ஆண்டளவில் ஜப்பானுக்குச் சென்று மகஇர் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1925ல் மீண்டும் தன் தந்தையார் இறந்த்தும் அமெரிக்காவுக்கு வந்தார். ஓராண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வந்து கிமேயியில் உள்ள கினமாட்டோ கோகுவென் சிறுமியர் உயர்நிலைப்பள்ளி சேர்ந்தார். ஜென்கின்சு 1932ல் அமெரிக்காவுக்கு வந்து, யேல் பல்கலைக்கழக வான்காணகத்தில் புலவுறுப்பினராகச் சேர்ந்தார். இவர் வானியல் இதழின்( Astronomical Journal) இணையாசிரியராக 1942ல் இருந்து 1958 வரையில் பணியாற்றி உள்ளார். இவர் தன் வாழ்நாளின் கடைசியில் மீண்டும் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார்.


இவர் அண்மையில் உள்ள விண்மீன்களின் கோணவியல் இடமாறு தோற்றப் பிழை ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். இவர் மாறும் விண்மீன்களைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் சூரியனில் இருந்து 10 பார்செக் தொலைவுக்குள் அமைந்த விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கினார். மேலும், யேல் பொலிவுமிகு விண்மீன்களின் வானியல் அட்டவணையையும் திருத்தம் செய்தார். விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு மே 9, 1970ல் தனது 82வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]