வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் பாஜகவினர் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் சங்க அரங்கில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,
ஓராண்டு காலத்தில் அத்தனை துறைகளிலும் பல்வேறு வகையில் வேலைவாய்ப்பு, பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம்.கோடிக்கணக்கானை ரூபாய் நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி தந்துள்ளோம்.என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார். 10 ஆண்டு காலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம்.
மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள் என சி.டி ரவின் கருத்துக்கு
(பாஜக)எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்து தான் ஓராண்டு காலத்தில் முதல்வர் பலபணி செய்துள்ளார்.மத்திய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை.இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார்.
வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் தான் அவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.எதிர்க்கட்சி தலைவர் துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.எதிர்க்கட்சித்தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார்.
லூலூ மாலின் ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு ஏன் செங்கல்லை போய் பிடிக்க போறாரா? அண்ணாமலை என்னென்னமோ சொல்கிறார்.
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளை செய்ய முன்வந்தவர் முதல்வர்.வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர்.
தமிழ்நாடு பங்கீடு நிதி 1ரூபாய் பெற்றுக்கொண்டு 35 பைசா கொடுக்கின்றனர். வணிகவரித்துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும்.தமிழக பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக்கொடுக்காமல் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு 28ஆயிரம் கோடியை தர வேண்டிய நிதியை இன்னும் தரவில்லை
பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுவிட்டனர் . அதற்கு வட்டியும், கடனும் கட்டிக்கொண்டுள்ளோம். முதலமைச்சர் இந்த1 ஆண்டில் பல சாதனைகளை செய்துள்ளார். அதற்கு இணையா அவர்கள் என்ன செய்தார்கள் என சட்டமன்றத்தில் பேச சொல்லுங்கள்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேட்டியளித்தார்.
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […] - 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடுவிதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு […]