திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் திருமணம் போன்ற முக்கிய வைபவங்கள் இந்த கோவிலில் நடை பெறுவது வழக்கம் இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதால் சன்னதி தெருவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கூட்டமாக இருந்தனர்