பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், அஇஅதிமுக எனும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி,

சமூகநீதி, சமத்துவத்தின் உறைவிடமாய்த் தமிழகத்தை திகழச் செய்த திராவிடப் பேரரசி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில்,

இன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா வின் நினைவிடத்தில் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், மாண்புமிகு. எடப்பாடியார்* அவர்கள்
மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் தலைமைக்கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

உடன் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர், தமிழக எதிர்கட்சி துணைத்தலைவர் மாண்புமிகு. R.B.உதயக்குமார் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்,
திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளார் அவர்கள், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.








