• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

“குதிரைக்கொம்பு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பணி..,

Byஜெ.துரை

Mar 19, 2026

கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும், நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே “குதிரை கொம்பு”

ஆப்பிள் மூவீஸ், யாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அய்யனார் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.

இல்லியஸ், ராம்ராஜ், ரமேஷ்,பிரவீன், சௌகத் அலி,சனா ஸ்ரீ, துர்கா ,லாவண்யா, வேல்ராஜ் ,மம்முட்டி சிங்காரவேலன், சண்முகம், ரவி ,சேகர்,சரவணன், கணேஷ்,அய்யனார் கிருஷ்ணன் ஆகியோர்கள் கதையின் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு — ஏ.எஸ்.ராஜ், ஜெய்குமார் இசை – சௌகத் அலி பாடல்கள் – கலையமுதன் மக்கள் தொடர்பு — வெங்கட் நிர்வாகத் தயாரிப்பு – தஷி கிரண்
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் – டி.கே புரொடக்சன்

தயாரிப்பு – கோமதி அய்யனார், யாஸ் , ஆர்.ரமேஷ் கதை திரைக்கதை வசனம் இயக்கம் – அய்யனார் கிருஷ்ணன். இப்படத்தில் மூன்று பாடல்களுடன் மூன்று சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த ஊரிலே கோழிப் போரு… என்ற திருவிழா பாடல் சேலம் செட்டிச்சாவடியிலுள்ள ஊரடி மாரியம்மன் திருவிழாவில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு சேலம், ஏற்காடு,பாலக்காடு ஆகிய இடங்களில் 55 நாட்களில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்பொழுது நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.