• Fri. Mar 29th, 2024

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” ராகுல்காந்தி

ByA.Tamilselvan

May 21, 2023

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் “ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்
தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து புதிய கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, “புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” என்று கூறியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். “பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் உள்ளார். ஜனாதிபதி, இந்தியாவின் தலைவராக உள்ளார். அவர்தான் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்” என்று கருத்து கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *