ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இவர், கடந்த 35 வருடங்களாக தனது மனைவி மீனாட்சியுடன் டெல்லியிலேயே வசித்து வருகிறார்.
வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தனது சொந்த ஊருக்கு வந்து உறவினர்களை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவர்களுடைய மகன் மற்றும் மகள் கோவையில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக அரசியார்பட்டி கிராமம், வடக்கு ஆண்டாள் புரம் பகுதியில் 9 சென்ட் நிலத்தை வாங்கி முறையாக வேலியிட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிலத்தை குமார் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கப் போவதாக கூறி கோவையை சேர்ந்த ஒருவர் நிலத்தை பார்வையிட்டு சென்றுள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் டெல்லியில் இருந்த ராஜேந்திரனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த அவர்கள் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர்.
விசாரணையில் ராஜேந்திரன் மதுரை அருகில் உள்ள கிராமத்தில் இறந்ததாகவும், மீனாட்சி உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தில் இறந்ததாகவும் இறப்பு சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது. இப் போலியான இறப்பு சான்றிதழ்களை வைத்து கணேஷ்குமார் என்ற பெயரில் உசிலம்பட்டியிலேயே வாரிசு சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் சொந்த வீடு அமைந்துள்ள தெருவின் முகவரியிட்டு கணேஷ்குமாரின் ஆதார் அட்டையும் ஆவணத்தில் இருந்துள்ளது. இறந்தவர்களின் வாரிசான கணேஷ் குமார் என குறிப்பிடப்பட்டிருந்த அந்த அடையாளம் தெரியாத நபர், கோவையை சேர்ந்த குமார் என்பவரின் பெயருக்கு இவர்களது 9 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததற்கான ஆவணங்களும் இருந்துள்ளது.
இது குறித்து ராஜேந்திரன் சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் உதவியுடன் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நிலத்தை விற்றவர் மற்றும் பத்திரம் பதிவு செய்தவர் என இருவரின் முகவரிக்கும் கடிதம் அனுப்பி சரி பார்த்துள்ளனர்.
ஆனால் இரண்டு முகவரிகளும் போலியானது என இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே திரும்பி உள்ளது. பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த செல் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
தன்னுடைய நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவு துறை அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு புகார் துறையிலும் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். 4 மாதங்கள் ஆகியும் இது வரை அதிகாரிகள் மட்டத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜேந்திரனும், அவரது மனைவி மீனாட்சியும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தங்களது இறப்பு சான்றிதழை காட்டி நீதி கேட்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதே நிலை வேறு யாருக்கும் மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் மீனாட்சி தெரிவித்தார்.
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]