• Sat. May 4th, 2024

குமரிக்கு ஜனநாயக கடமை ஆற்றவந்த சொந்த ஊர் மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பினார்கள்.

கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க. சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய இடங்களில் பணியாற்ற, சொந்த ஊரான குமரிக்கு வந்தவர்கள் மீண்டும் பணி இடங்களுக்கு செல்ல. நேற்று (ஏப்ரல்-21) நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்ல பெரும் கூட்டமாக குவிந்தனர்.

தமிழக அரசு போக்குவரத்து இதற்காக கன்னியாகுமரியில் இருந்து 200_க்கும் அதிகமான சிறப்பு விரைவு பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் பயணத்திற்கு எவ்வித காலதாமதம் இல்லாது பேருந்து பயணத்தை வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்திலிருந்து பயணப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *