தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நேற்று(ஜன.,21) நள்ளிரிவு திடீரென கிரேன் மூலம் துாணை இணைக்கும் போது இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் துாரத்திற்கு, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி, கடந்த 2017-ம் ஆண்டு 3.517 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 3 பிரிவுகளாக, கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உட்பட 26 ஆற்றுப்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள் ,3 ரயில்வே மேம்பாலங்கள் , 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 34 ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டுரோடு ,மீன் சுருட்டி, குமாரக்குடி உட்பட 23 இடங்களில் மேம்பாலங்களும் ,ஒரு சுங்கச்சாவடியும் கட்டப்பட்டு வருகின்றன.3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் காவிரி, வெண்ணாறு ,வடவாறு உள்ளிட்ட 22 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் ,தாராசுரத்தில் ரயில்வே மேம்பாலம் ,வளையபேட்டை ,ராஜகிரி ,திருக்கருகாவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம் , மேலசெம்மங்குடி ,பொன்மான் மேய்ந்த நல்லூர் ,சூலமங்கலம் ,புறக்குடி, வடக்குமாங்குடி ,அருள்மொழிபேட்டை ,வையச்சேரி ,உதாரமங்கலம் ,அகரமாங்குடி ,அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது 4 வழி சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை – அரியலுார் மாவட்டத்தை இணைக்கும் சுமார் 1.5 கிலோ மீட்டர் துாரம் உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 5 மற்றும் 6வது துாண்களை இணைக்கும் வகையில் நேற்று கான்கிரீட் போட்டுள்ளனர். இந்த கான்கிரீட் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில்; 15 தொழிலாளர்கள் பாலத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 12 அடி அகலம் 50 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாலத்தை ஸ்டன் ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்ற போது பாலத்தின் பாரம் தாங்காமல் கிரேட் கம்பி அறுந்து பாலம் கீழே விழுந்தது. தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து விட்டதால், உயிர் சேதம் எதுவும் இல்லை. இதில் புதிதாக கட்டப்பட்ட துாண்களும் மற்றும் பாலமும் சிறியளவில் இடிந்து சேதம் அடைந்ததுள்ளது என்றனர்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]