அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்கும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கவேண்டும் என சூரியமூர்த்தி புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்கூட்டத்தை தள்ளி வைக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்ததால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருதவேண்டும் என்றார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தள்ளி வைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சூரியமுர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தார். இதற்கு சூரியமூர்த்தி தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் என்பதற்கு ஆதாரம் இருப்பதாகவும், உறுப்பினர் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார் நீதிபதி. இந்த மனுவுக்கு நாளை பதில் அளிக்கும்படி எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
- பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுதமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக […]
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி […]
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]