தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து,எடை போட்டு உள்ளாட்சி தேர்தலில் வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் கூறியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.1374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்,சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரைக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிவடையும் நிலையில்,தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,நெல்லையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் :”உள்ளாட்சி தேர்தல் என்பது தொண்டர்கள் பங்கேற்கும் தேர்தல்,இந்த தேர்தல் மூலம் தொண்டர்கள் கட்சியில் படிப்படியாக வளர முடியும்.மேலும்,50 ஆண்டு காலத்தில் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக இருக்க தொண்டர்களே காரணம்”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்:”தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சியை எண்ணிப் பார்த்து,எடை போட்டு உள்ளாட்சி தேர்தலில் வாக்களியுங்கள்”,என்று கூறினார்.
ஆனால்,தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிதான் இருந்தது என்பதை மறந்து ஓபிஎஸ் திடீரென இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. அவர் தெரிந்து பேசினாரா இல்லையென்றால் கட்சிக்குள் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால் எடப்பாடியார் கையில் தலைமை சென்றதில் இருந்தே கடும் அப்செட்டில் தான் ஓபிஎஸ் இருந்து வந்துள்ளார்.அதனை பல நேரத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கூட கூட்டத்தில் வைத்தே ஓபிஎஸ்க்கு தகுந்த மரியாதையை வழங்காமல் கூட்டத்தின் பாதியிலேயே எப்படியாவது போங்க என்று சாபம் விட்டு சென்றுவிட்டார். பிறகு பெயருக்கு ஒரு எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியை அளித்து அழகுபடுத்தி உள்ளது. ஏற்கனவே சேலத்தில் எடப்படியாரின் நெருங்கிய நண்பரின் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருவதால், அப்செட்டில் உள்ளார். மேலும் நெல்லையில் ஓபிஎஸ் பேசிய பேச்சை கேட்டு மேற்கொண்டு டென்சன் தலைக்கேறி என்ன செய்வதென்று தவித்துக்கொண்டிருக்கிறார்.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]