ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமான பறவைகள் இறந்துவிழுந்ததால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
அசாமின் பர்ஹாம்பூரில் நகாவன் நகரில் சாந்திவன பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்தன. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிரிழந்து கிடந்த பறவைகள் அருகே, உயிருடன் போராடிக்கொண்டிருந்த மீதமிருந்த பறவைகளை காப்பாற்றுவதற்காக நெருப்பு மூட்டி வெப்பம் பரவ செய்தனர்.பல பறவைகள் இறந்தபோதிலும், நெருப்பு மூட்டி அனல் பரவ செய்து, மற்ற பறவைகளை காப்பாற்றினோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அறிந்து அதிகாரிகள், காவல்துறையினர் நேரில் சென்றனர். அப்போது, கனமழை மற்றும் கடும்பனி ஆகியவற்றை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது நிலவி வரும் கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வனசரக அதிகாரி மலாகர் கூறும்போது, உயிருடன் பிடிப்பட்ட அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அவற்றை குணப்படுத்த எங்களால் முயன்றவரை சிறப்புடன் செயல்படுவோம். வானிலை மோசமடைந்த சூழலால் மருத்துவர்கள் இங்கு வரவில்லை. 100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.
அதேநேரத்தில் பறவை காய்ச்சலால் அவை பாதிப்படைந்து உயிரிழந்து இருக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனினும் இது குறித்து ஆய்வு செய்துதான் முடிவு செய்யப்படும் என்றும், பறவை காய்ச்சல் தான் காரணம் என்றால் உடனடியாக கிராமப்பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர். உயிரிழந்த பறவைகளில் அதிகளவில் கொக்குகள் உள்ளதாகவும் மேலும் சில பறவைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]