உலகம் முழுவதும் குரங்கம்மை மிக வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் குரங்கம்மைக்கான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாடு தயாரித்துள்ளது.
குரங்கம்மைதொற்று பரவல் உலக முழுவதும் தீவிரமடைந்துள்ளது.சில ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை கொண்டுவரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் 8 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச்சேர்ந்த மருத்துவ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ்(imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.பெரியம்மை நோய்க்கு பயன்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் குரங்கம்மைக்கு எதிராக பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.