உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் மழை பெய்து கரடு முரடான சாலையில், தண்ணீர் தேங்கியிருந்திருக்கிறது. அப்போது, அந்த வழியே சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுமிமீது திடீரென மின்சாரம் தாக்கியிருக்கிறது. தவறி குழந்தை கீழே விழுந்திருக்கலாம் என நினைத்த அந்த வழியே சென்ற முதியவர் ஒருவர், குழந்தையைத் தூக்க முயன்றபோது, அவருக்கும் மின்சாரம் தாக்கியிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட அவர், உடனே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் சிறு மரக்குச்சியை எடுத்து அக்குழந்தையை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.