ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே அமுத்சுரபி என்ற சிறு சேமிப்பு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. சேலத்தை தலைமையிடமாக கொண்டு, ஜெயவேல் என்பவர் தலைமையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
ராஜபாளையத்தில் செயல்பட்ட நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வாடிக்கையளர்களிடம் நேரடியாக சென்று தினசரி வசூல் செய்து வந்துள்ளனர். ரூ. 100 முதல் ஆயிரம் வரை செலுத்தும் மக்களுக்கு, குறிப்பிட்ட நாட்களின் நிறைவில் அசலுடன் ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
எனவே நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களில் கடை வைத்திருப்பவர்கள், உணவகங்கள் நடத்துபவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சிறிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் 2 வருடங்கள் மக்கள் செலுத்திய அசல் தொகையுடன், ஊக்க தொகையும் வழங்கிய நிறுவனம் கடந்த ஆண்டுக்கான தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சேலத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் நிதி நிறுவனம், ஜெயவேல், தங்கப்பழம், பிரேம் ஆனந்த், சரண்யா உள்ளிட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் பூட்டப்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது வரை பணம் திரும்ப கிடைக்கவில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இந்த நிலையில் இன்று வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் அலுவலகத்தை திறந்தனர். ஆய்வாளர் மலர்விழி தலைமையில் 5 அதிகாரிகள் அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரம், கணக்கு புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையின் நிறைவில் அலுவலகத்தில் இருந்த ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்து சென்றனர்.அலுவலகம் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும், பணம் செலுத்திய 40க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை சுற்றி திரண்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒரு சிலர் தங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]