கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நல்லாண்டி என்ற முதியவர், படம் வெளியாகும் முன்னே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘கடைசி விவசாயி’. கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வந்தது. இந்தப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்தப்பின் ரசிகர்கள், விமர்சகர்கள் படத்தில் நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக பாராட்டியிருந்தனர்.
மேலும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான மாயாண்டி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நலலாண்டி என்பவர் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால், நலலாண்டி படம் வெளியாகும் முன்பே உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் குடும்பத்தை யூடியூப் சேனல் ஒன்று நேர்காணல் செய்திருந்தது. அப்போது பேசிய நல்லாண்டியின் மகள் கூறுகையில், கடைசி விவசாயி படத்தில் அப்பாவை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் படம் பார்க்க உயிருடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை; அவரது நிஜ வாழ்க்கையை தான் படத்தில் கதையாக இருந்தது என்பதால் அதில் அவர் ஒன்றிப்போய் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
எனது அப்பா விவசாயம், 100 நாள் வேலை செய்து வந்தார். ஒருநாள் அப்பா 100 நாள் வேலை செய்யும்போது அங்கு வந்த படக்குழுவினர் அவரிடம் படக்கதையை கூறி நடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அப்பாவுக்கும் கதை பிடித்திருந்ததால், நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர், நடித்துவிட்டு ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போது படப்பிட்ப்பு தளத்தில் அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறி வந்தார். படப்பிடிப்பு முடிந்ததும்தான் கொரோனா வந்து விட்டதும். நாங்களும் படக்குழுவினரிடம் படம் எப்போது வெளியாகும் என கேட்டு வந்தோம். விரைவில் படம் வெளியாகும் என அவர்கள் சொல்லி வந்தனர். ஆனால், படம் வெளியாவதற்குள் அப்பா உடல் நலகுறைவால் உயிரிழந்துவிட்டர். அது எங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், படத்தில் நடித்து பலரின் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என தெரிவித்தார்.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]