திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி திருக்குளம் தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் எம்.என்.நந்தன். இவர், கடந்த 4-ம் தேதி திருக்குளம் ரேஷன் கடையில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பையை பெற்றார்.
வீட்டிற்கு சென்ற அவர், சமையல் செய்வதற்காக பொங்கல் தொகுப்பு பையில் இருந்த புளி பொட்டலத்தை பிரித்தார். அப்போது, புளியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று ஒட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து எம்.என்.நந்தன் கூறியதாவது: “கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் வீட்டில் நான் தான் பெரும்பாலும் சமையல் செய்வேன்.
சாம்பார் வைப்பதற்காக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பையில் இருந்து புளி பொட்டலத்தை பிரித்தேன். அதில், பல்லியின் கண், வால் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பொட்டலத்தை முழுவதுமாக பிரித்தபோது, இறந்த நிலையில் பல்லி இருந்தது.
அதை அப்படியே கவரில் போட்டு, ரேஷன் கடை விற்பனையாளர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தேன். அவரோ, ‘எனக்கு வந்த பொட்டலங்களை அப்படியே பையில் போட்டுக் கொடுத்தேன். எந்த பொருளையும் நான் பொட்டலமாக தயாரிக்கவில்லை’ என்றார். வருவாய் கோட்டாட்சியரிடமும் புகார் தெரிவித்தேன்” என்று அவர் கூறினார்.இதுகுறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மா.சத்யா கூறுகையில், “புளியில் பல்லி இருப்பதாக புகார் தெரிவித்த நபரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினோம். அவர், எங்களிடம் காட்டும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளி சுற்றப்பட்ட பையை காட்டாமல், வேறு கவரில் அடைக்கப்பட்ட புளியை காட்டினார்.
புளியில் பல்லி இருப்பதாக கூறும் அவர், அதே கவரில் ரேஷன் கடை விற்பனையாளரிடம் காண்பித்து இருக்கலாம். அவர் வீட்டிற்கு எதிரில்தான் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை உள்ளது. தீர விசாரித்த பின்னர் தான் உண்மை தெரியவரும். இதுவரை, பொங்கல் தொகுப்பில் குறை இருப்பதாக யாரும் கூறவில்லை” என்றார்.
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]
- நீலகிரி மாவட்டம் பாலகெலா ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் பாலகெலா ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் […]
- உதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாஉதகை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 4வது நாளான நேற்று உபயதாரர் பராசக்தி மகளிர் வார […]
- மதுரை அருகே விபத்து – 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயம்மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து 3 பெண்கள் உட்பட ஐந்து […]
- சோழவந்தான் ரயில் நிலையத்தில் கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்புசோழவந்தான் ரயில் நிலையத்தில் பழுதடைந்த மின்விளக்குகளால் கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு ரயில்வே நிர்வாகம் சரி செய்ய […]
- மதுவிற்பனை வருவாயில் அரசாங்கம் நடத்துவது வெட்ககேடானது – இயக்குநர் பேரரசுKNR மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.N.R.ராஜா தயாரித்து,அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் […]
- கமல் சாரை பார்த்து சினிமாவில் நுழைந்தேன் தமிழ்நடிகை சுவிதா ராஜேந்திரன்தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்க வைத்து […]