• Fri. May 10th, 2024

தாமதமாக பயணம் தொடங்கிய படகு.., அலை கடலென திரண்ட சுற்றுலா பயணிகள்…

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக வழக்கமாக காலை 8_மணிக்கு தொடங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு இயக்கம் தாமதமானது.

ஞாயிறு விடுமுறை தினமானதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடல் சீற்றம் பிற்பகல் வாக்கில் சகஜம் நிலைக்கு வந்ததை தொடர்ந்து.4_ங்கு மணி நேரம் தாமதமாக படகு பயணம் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு பயணம் மேற்கொண்டனர்.

சாதாரணமாக மாலை 5_மணிக்கு நிறைவடையும் படகு பயணம் இன்று மாலை 6_மணி வரை நீடிக்கப்பட்டதால், சுற்றலா பயணிகள் ஏமாற்ற அடையாது, கடலில் படகு பயணம் மேற்கொண்டு கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று வந்ததால் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றம் தவிர்க்க பட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *