தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன்படி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சென்னை முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக அண்ணாமலை வந்தார். கொளத்தூர்- செங்குன்றம் சாலை மூகாம்பிகை பேருந்து நிலையம் அருகே அவர் பிரசாரம் செய்வதற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 7 வேட்பாளர்களும் மேடையில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அண்ணாமலை மேடையில் ஏறி பிரசாரம் செய்வார் என்று பாஜ தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து காரில் வந்த அண்ணாமலை அங்கு கூட்டம் குறைவாக இருந்ததால் அப்செட் ஆனார். இதனால் அவர் மேடையில் ஏறாமல் வாகனத்திலேயே நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசிய இடம் 3 சாலைகளின் சந்திப்பு என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதனால் அவர் பிரசாரம் செய்ய தொடங்கிய சில வினாடிகளிலேயே அடுத்தடுத்து வரிசையில் நின்ற வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்க தொடங்கினர். இதனால் அண்ணாமலை 2 முறை மக்களை திரும்பி பார்த்து கோபப்பட்டார். இதையடுத்து வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் கூறி, இவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கூறிவிட்டு பேச்சை முடித்துவிட்டு உடனடியாக கிளம்பி சென்றார்.
இதையடுத்து அவர் கிளம்பிய சில வினாடிகளிலேயே பாஜக சார்பில், 64 வது வார்டில் போட்டியிடும் சரவணன் என்பவரை சூழ்ந்துகொண்ட பாஜக நிர்வாகிகள், ”புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நீங்கள் ஏன் கொளத்தூரில் போட்டியிடுகிறீர்கள். இங்கு பாஜகவில் ஆளா இல்லை’ என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்தையாவை அடிக்க பாய்ந்தனர். பதிலுக்கு மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளரை அடிக்க பாய்ந்ததால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்குவந்த போலீசார் பாஜவினரை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]