• Thu. Jun 1st, 2023

ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சேஷா ஜெயராமன் ஜல்லிக்கட்டு காளையுடன் நூதன முறையில் வார்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *