• Sun. Apr 28th, 2024

குமரி அய்யா வைகுண்டசாமி தலைமை பதவியில் தை திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிவியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11_நாட்கள் திருவிழா நடப்பது இந்த தலைமப்பதிவியின் தனித்த சிறப்பு.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (ஜனவரி_19)ம் நாள் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 4_மணிக்கு முந்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல் அடுத்து காலை 5_மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 11_வது நாளில் எதிர் வரும் ( ஜனவரி29)ம் தேதி நண்பகல் 12மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

இவ்வாண்டு தை திருநாள் நடைபெறும் காலத்தில் எதிர் வரும் 22-ம்தேதி. தமிழக எதிர் கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சாமி தோப்பு தலைமை பதிவிக்கு வரவிருக்கும் தகவலை, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *