• Mon. May 12th, 2025

கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து

ByA.Tamilselvan

Jun 13, 2022

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்கவிழ்ந்து பெரும் விபத்து.
கோயில் தேர் கவிழ்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரும் விபத்து ஏறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.தற்போது வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள காளியம்மன் கோவில் விழாவில் தேர் ஊர்வலம் செல்வது வழக்கம். விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச்சென்றபோது திடீரென அச்சானி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2 பேர் பலியான தாக தகவல்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவாய்ப்பு இருப்பாதாக சொல்லப்படுகிறது,