தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள், குழந்தைகளாகவே மாறி பாடம் கற்றுக் கொண்ட நிகழ்வு வியப்பைத் தருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த வகுப்பில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் செயல்பாட்டு முறையுடன் எண்களையும் எழுத்துக்களையும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகள் செயல்முறை வாயிலாக எடுக்கப்பட்டது.
பயிற்சியின் இறுதியில் குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான கையேடு என மொட்டு, மலர், அரும்பு வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனுடன் ஒரு அட்டவணையும் வழங்கப்பட்டது. இது குழந்தைகளின் செயல்பாடு திறன்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கான அட்டவணை ஆகும்.
தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டம் என்பது கொரோனா காலகட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு எண்களையும் எழுத்தையும் மறந்துவிடாமல் ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்வதற்கான ஒரு செயல்முறை பயிற்சியாகும்.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்களின் வார்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் செயல்முறை வாயிலாக பாடங்களை கற்றுக் கொடுப்பார்கள். அதற்கான ட்ரெயினிங் வகுப்புகள் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எப்படி செயல்முறையில் கல்வியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை தாங்களே செய்து அதன் மூலமாக குழந்தைகளுக்கும் கற்பிக்கின்றனர். இந்த வகுப்பு ஆசிரியர்களும் குழந்தைகளாகவே மாறி ஆர்வத்துடன் செயல்பாடு முறைக் கல்வியை கற்பிக்கும் முறையை கற்றுக் கொண்டனர்.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]