• Fri. Apr 26th, 2024

தமிழ்ச் செம்மல் விருதுகள்: முதலமைச்சர் வழங்கினார்

ByA.Tamilselvan

Dec 21, 2022

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள் 38 பேருக்கு தமிழ் செம்மல் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த 5 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபு உரிமையரிடம் நூலுரிமைத் தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கிய வியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *