• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயம்… பழனி அருகே அதிர்ச்சி!

Byதரணி

Apr 5, 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6 மாணவிகள் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சமையலர் அபிராமி, நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி உள்ளிட்ட 7பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.