சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் நீண்டகால பிரார்தனை வலிமை படத்தை வெளியிடுங்கப்பா எங்களால் முடியல என்கிற புலம்பல்கள் அதிகரித்து வந்தன. இதற்கு காரணம் அஜீத்குமார் ரசிகர்கள்! அஜீத்குமார் புகைப்படம் அல்லது டிரைலர் இவற்றை வைத்து படத்தை புரமோட் செய்கின்ற வேலைகளை செய்து வந்தனர். இதனால் வேறு செய்திகள், தகவல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன.
ஒரு கட்டத்தில் எவ்வளவு நாளைக்குத்தான் அரைச்ச மாவையே அரைக்க போறிங்க என்கிற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் 169 பட அறிவிப்பு, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் சிங்கிள் வெளியானது. ஒரு வழியாக பிப்ரவரி 24 அன்று வலிமை வெளியீடு உறுதியாகி உள்ளது. அஜீத்குமார் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் வலிமையில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கும் ஆவலில் இருக்கிறார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பதட்டத்திலும், பயத்திலும் இருக்கிறார் என்கின்றனர்.
அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில அதாவது, ’நேர்கொண்ட பார்வை’ முடிந்து 2019ல் தொடங்கப்பட்ட வலிமை கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக தாமதமானது ஆனால் அதற்கு பின் தொடங்கப்பட்ட பல படங்கள் வெளியாகிவிட்டது. ஆனால் வலிமை ரிலீஸ் தாமதமானதால்
அந்தப் படத்தின் மீதான ஆர்வம் பொது வெளியல் குறைந்து கொண்டே போகிறது. அஜித்குமார் ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது. வெகுஜன பார்வையாளர்கள் தியேட்டருக்கு திரளாக வர வேண்டும். அப்போதுதான் தற்போதைய நிலையில் படத்தின் பட்ஜெட் அளவு வசூல் ஆகும்.
இரண்டு வருடங்களாக படத்தின் மூலதனத்திற்கான வட்டி இவையெல்லாம் சேருகிற போது படத்தின் வியாபாரத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அவற்றையெல்லாம் ஈடுகட்ட வேண்டும் என்றால் அதற்கு மிக பெரிய அளவில் விளம்பரம் தேவை. அதனை இதுவரையிலும் தயாரிப்பு தரப்பால் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து தொடங்க முடியவில்லை. படம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் படம் சம்பந்தமான தகவல்கள், புகைப்படங்களுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றுகூட நடத்தப்படவில்லை.
இவற்றையெல்லாம் யோசித்து பார்த்த தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் அஜித்குமாரிடம் வலிமை ரிலீஸ் குறித்து சில நொடிகள் பேசக்கூடிய வீடியோ ஒன்றை பேசித் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அஜித்குமார் தனது வழக்கமான கொள்கைகளின் படி முடியாது என்று மறுத்துவிட்டாரம். ‘பிடிச்சவங்க பார்க்கட்டும், பிடிக்கலைன்னா பார்க்க வேண்டாம்.’ என்று பழைய வசனத்தை போனி கபூரிடம் பேசியிருக்கிறார்!
அஜீத்குமார் பதில் கேட்டு கடுமையானஅதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் போனிகபூர். படத்தின் வெளியீடு தாமதமானதால் அஜித்குமாருக்கு எந்த இழப்புமில்லை. ஆனால் போனி கபூருக்கு தினம் கடன் சுமை உயர்ந்து கொண்டே போகிறது. அஜீத்குமாரை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்க கூடிய பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ச்சுன் போன்ற நடிகர்கள் தாங்கள் நடித்த படத்தின் வெற்றிக்காக இந்தியா முழுவதும் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றனர். ஆனால் தயாரிப்பாளர் சிரமத்தை புரிந்துகொண்டு அஜீத்குமார் உதவி செய்ய தயாராக இல்லை இதன் காரணமாகவே வேறு வழியின்றி இந்தி நடிகையும்,, தன் மகளுமான ஜான்வி கபூரை தனது இன்ஸ்டாவின் மூலம் வலிமையை பிரபலப்படுத்த வீடியோ வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்.
இத்தனை முரன்பாடுகள் இருந்தபோதிலும் அஜீத்குமார் அடுத்து நடிக்க போகும் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இருந்தபோதிலும் தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் வலிமை மூலம் எனக்கு வலிதான் ஏற்படுகிறது என புலம்புகிறாராம். வலிமை படத்தின் வியாபாரம் 300 கோடி என இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அது உண்மை இல்லை. என்பதை கூறியும் புலம்பியுள்ளார்.
போனி கபூர் வலிமை படம் தமிழ்நாடு திரையரங்க உரிமை 62 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு விநியோக உரிமை 18 கோடிக்கும், தொலைக்காட்சி, ஓடிடி உரிமை 60 கோடிக்கும், கேரளா, கர்நாடகா, வட இந்திய உரிமைகள் சுமார் 20 கோடி வரை வியாபாரமகி உள்ளது. ஆக மொத்தம் வலிமைபட வியாபாரம் மூலம் தயாரிப்பாளருக்கு அதிகபட்சமாக ரூபாய் 180 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட்டும் அதே அளவு ஆகியுள்ளதுஇதன் காரணமாக படத்திற்கான வரவேற்பு, தியேட்டருக்கு மக்கள் வருகையை பொறுத்தே வலிமை படத்திற்கான வசூலை எதிர்பார்க்க முடியும் என்பதே தற்போதைய நிலைமை. அதனால்தான் போனி கபூர் புலம்ப தொடங்கியுள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரம்!
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]