என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அதற்கான புரமோஷனாக எதற்கும் துணிந்தவன் டீசரை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. கையில் வாளுடன் சூரசம்ஹாரம் செய்ய நடிகர் சூர்யா தயாராகி விட்டார் என்பது டீசரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாகத் தெரிகிறது.
டீசரில் இடம்பெற்ற அந்த அண்ணே வாய்ஸ் மற்றும் டீசரின் இறுதியில் ஒரு பெண் சூர்யா அருகே நின்றிருக்க அவருக்காக மற்றவர்களை அடித்துப் புரட்டியெடுக்கும் சூர்யாவின் ஆக்ஷன் பிளாக்குகளை பார்த்தால், பொள்ளாச்சியில் இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்த கதையை தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டீசரின் ஒரு காட்சியில் மூன்று இளைஞர்கள் செல்போனை பார்க்கும் காட்சியும், கம்ப்யூட்டரில் வாய்ஸ் அனலைஸ் பண்ணுவது போன்ற ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அந்த மூவரில் வடசென்னை மற்றும் நெற்றிக்கண் நடிகர் சரண் தெளிவாக தெரிகிறார். பிக் பாஸ் சிபியும் இந்த படத்தில் வினய் உடன் அமர்ந்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தில் ஹீரோவுடன் இருந்த சிபி இந்த படத்தில் வில்லன் உடன் உள்ளார்.
சாக்லேட் பாய் ஹீரோவாக நடித்து வந்த ‘உன்னாலே உன்னாலே’ வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் செம ஸ்மார்ட்டான வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவர் தான் இன்பா எனும் கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.
வில்லன் மட்டுமில்லை எதற்கும் துணிந்தவன் படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனும் டாக்டர் படத்தில் நடித்தவர் தான். இவ்வாறு பல சஸ்பென்ஸ்களை கொண்டுள்ளது எதற்கும் துணிந்தவன் படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்!
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]