மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.ஜூன் 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 24ம் தேதி முதல் இன்று (31ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. அதன்படி, திமுக 3 இடங்களில் போட்டியிடும் என்றும், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு ப.சிதம்பரம் நேற்று மதியம் 12 மணிக்கு மனு தாக்கல் செய்தார். இதுதவிர 5 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை (ஜூன் 1ம் தேதி) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அப்போது, ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதன்படி, 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் நாளை தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. இறுதியாக மொத்தமுள்ள 6 இடத்துக்கு திமுக 3, அதிமுக, 2, காங்கிரஸ் 1 என 6 பேர் மட்டுமே போட்டியில் இருப்பார்கள். வேட்புமனு தாக்கல் இன்று (31ம் தேதி) மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூன் 3ம் தேதி (வெள்ளி) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
இனி, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதையடுத்து, ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன்படி, தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே களத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த 6 பேரும் வெற்றிபெற்றதாக ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்படும்.
- குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த்சின்ஹா வேட்புமனு தாக்கல்..!கடந்த 24ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
- எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் […]
- ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட […] - இபிஎஸ் ஐ முந்திய ஓபிஎஸ்..மு.க.ஸ்டாலினை முந்திய கமல்ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.ட்விட்டரில் அதிக […]
- மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோமீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் […]
- பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்புஅதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் […]
- பொதுக்குழுவுக்கு நடத்துவதில் சிக்கல் – இபிஎஸ் அதிர்ச்சிஅதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூன் 23ம் […]
- ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலைதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை […]
- வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, […]
- காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் […]
- புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் […]
- அதிமுக ஒருங்கிணைப்பாளரர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியதை கண்டித்து மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம்..,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் […]
- அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேருக்கு கொரோனா…சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு […]
- வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வுஇந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் […]
- பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்த கோலிவுட்டின் ‘விக்ரம்’…!பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் […]