“யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம்; வேட்பாளர்கள் தினமும் காலையில் கட்டாயம் வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க; வீடு…வீடாகச் சென்று விசாரித்தாலே போதும், நாம் உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறலாம்”, என தேனியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தி.மு.க., சார்பில் அதன் கூட்டணி கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. 33 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க.,- காங்., – வி.சி.க., உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் நேற்று (பிப்.,6) இரவு 7 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது; மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இங்கு கூடியுள்ளோம். அனைவரின் முகத்திலும் புன்னகை தெரிகிறது. நாம் எப்படியும் வெற்றி பெற்று விடுவோமென்று. அதுதான் கூடாது. இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே இருப்பதால், யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். வேட்பாளர்கள் தினமும் காலையில் ‘சுறுசுறுப்பு’டன் எழுந்து வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க…பிறகு வீடு…வீடாகச் சென்று விசாரிங்க…இதை செய்தாலே போதும் நாம் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறமுடியும். இதற்கு ‘பூத் கமிட்டி’ ஒத்துழைப்பு மிக அவசியம். ‘ரவுண்ட்ஸ்’ போகும் முன்பு அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசுங்க. இது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். சொல்லாமல் போனால் ‘சடவு’ ஏற்படும். வாக்காளர்களை பார்த்து அடிக்கடி ‘கும்பிடு’ போடுங்க. அப்போது தான் நம்மீது அவர்களுக்கு மரியாதை ஏற்படும். தமிழகத்தில் தி.மு.க., வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும்….நல்லாட்சி அமைப்போம்” என பேசி முடித்தார். பின்னர் வேட்பாளர்கள் பெயர் ‘மைக்கில்’ ஒலிக்க ஒவ்வொருவராக எழுந்து, மேடையருகே வந்து ‘இருகரம் கூப்பி’ தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார், தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், மாவட்ட காங்., தலைவர் முருகேசன், தி.மு.க., மாவட்ட குழு உறுப்பினர் எம்.வி.கே.ஜீவா, சி.பி.ஐ., மாநில குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆசாத், சி.பி.எம்., தாலுகா செயலாளர் தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]