தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், இந்தி சினிமாவில் முன்னணி நடிகராவார். தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில் ஏற்கனவே இவர் இருந்து வந்தார் இந்நிலையில், இந்தியில் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘பிரம்மாஸ்திரா’ படத்தின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும், இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தனர். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து வந்தநிலையில், ரன்பீர் கபூர் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், இவர்களது திருமணம் அப்போது தடைபெற்றது. இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கில் திருமணத்தை அவசர அவசரமாக நடத்தும் திட்டமில்லை என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணத்தை அவர்களது ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், என்.டி.டிவி.யின் முன்னாள் பத்திரிகையாளரான ராஜீவ் மசந்திக்கு கொடுத்தப் பேட்டியில், “கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு மட்டும் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், ஆலியாவுக்கும், எனக்கும் இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும்” என்று ரன்பீர் கபூர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டி அப்போது வைரலானது. இந்நிலையில், ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது. எல்லாமே ஒரு காரணத்திற்காகவே நடக்கும். நாங்கள் எப்போது திருமணம் செய்கிறோமோ, அது சரியாகவும் அழகாகவும் நடக்கும்” என்று கூறியுள்ளார். ஆலியா பட்

- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]