• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாழை மர பாலசுப்ரமணிய கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Nov 30, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி, சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.