• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாதா திருத்தல பங்கு மக்களின் மெளன ஊர்வலம்.

உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நாளை (ஏப்ரல்26) இந்திய நேரப்படி மாலை 3.30க்கு நடக்கவிருக்கிறது. இதன் அடையாளமாக.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம் முற்றத்தில் இருந்து பங்கு மக்கள், தலைமை பங்கு தந்தை உதவி பங்கு தந்தையர்கள் மறைந்த போப் பிரான்சிஸ் அஞ்சலி தெரிவிக்கும் வகையில்,

கன்னியாகுமரி ரவுண்டானா பகுதி வரை சென்று, மீண்டும் தேவாலயம் முற்றத்தில் நிறைவடைந்தது.

இந்த மெளன ஊர்வலத்தில் பங்கு மக்கள் அனைவரும் பங்கேற்று, மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.