• Fri. Apr 26th, 2024

திமுகவின் முடிவுரையை செந்தில் பாலாஜி எழுதுவார்- டிடிவி பேச்சு

ByA.Tamilselvan

Sep 16, 2022

மின் கட்டண உயர்வு பிரச்சனை காரணமாக திமுகவின் முடிவுரையை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுதுவார் என டிடிவி.தினகரன் பேசியுள்ளார்.
திருப்பூரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது..எடப்பாடியும்,ஓபிஎஸ்சும் அதிமுகவை வட்டார கட்சியாக மாற்றி விட்டனர். பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம் ஆகியோர் சிங்கங்களாக இருந்து இப்போதுநரிகளாகிவிட்டனர். திமுகவை முடித்து வைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவர் போதும். மின்கட்டண உயர்வு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் அமைதி காப்பது ஏன்? என கேட்டுள்ளார்.